தமிழக அரசு விடுத்த கோரிக்கையை நிராகரித்த டக்ளஸ்!

தமிழக அரசு, இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்குமாறு விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலான கடற்றொழில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை, குறிப்பிட்ட காலத்துக்கு இலங்கை கடற்பகுதியில் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குமாறு, தமிழக கடற்றொழில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைக் கடலுக்குள் வரமாட்டார்கள் என தமிழக அரசு உறுதியளித்த பின்னரே மீன்பிடி விவகாரம் குறித்து விவாதிக்க முடியுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!