பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை தரப்படும் என்ற பாஜக தலைவர் அண்ணாமலையின் வாக்குறுதிக்கு திமுக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுக்கும் வகையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று(பிப்.5) வேலூரில், ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தை பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களிடம் பேசிய அவர், “2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும். அதன்பின், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்” என கூறியிருந்தார்.
இதற்கு திமுக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது X தளத்தில், “7.6 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் 3ல் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக பாஜக கூறுகிறது. தமிழ்நாட்டில் தற்போது இருப்பது 9.5 லட்சம் அரசு வேலை. மக்கள் தொகைப்படி 2,397 கோடி அரசு வேலையை பாஜக எப்படி வழங்கும்” என்றார்.