சாந்தன் உடலை ஒப்படைப்பதில் தாமதம்!

இலங்கை வந்தடைந்த சாந்தன் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த சாந்தனின் உடல் நேற்று சிறப்பு விமானம் மூலம் கொழும்புவில் உள்ள காட்டுநாயக்கன் விமானநிலையத்தில் வந்திறங்கியது.

இதையடுத்து, அவரது உடல் மீள் பிரதேச பரிசோதனை செய்வதற்காக நீர்கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆனால், சாந்தனின் உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டியை, நீதிபதி முன்னிலையில் திறக்க வேண்டும் என்பதால், அதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த மருத்துவமனைக்கு நீர்கொழும்பு நீதிபதி இன்று காலை 10 மணிக்கு வரவில்லை. இதனால் அவர் வருகை தந்த பின்னரே பிரேதச பரிசோதனை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

இதனால், அவரது உடலை உறவினர்களிடம் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இன்று மாலை உடல் ஒப்படைக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

அதன்பின், யாழ்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!