கன்னடத்தில் பிரபலமான நடிகர் தர்ஷன் மீது அவதூறு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
1997ஆம் ஆண்டில் வெளியான மகாபாரதா எனும் கன்னட படத்தில் அறிமுகமானவர் தர்ஷன்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து தற்போது கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
இவர் பல்வேறு சர்ச்சைகள் மற்றும் வழக்குகளிலும் சிக்கியிருக்கிறார். இந்த நிலையில் ஸ்ரீரங்கப்பட்டணாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பெண்களைப் பற்றி தர்ஷன் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.
அதேபோல் குறிப்பிட்ட சமூகத்தின் தலைவர்கள் குறித்து தர்ஷன் அவதூறு ஏற்படுத்தும் விதத்தில் பேசியதாகவும் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனால் தர்ஷனின் பேச்சை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகளிர் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இருவர் தர்ஷன் மீது 2 பேர் தனித்தனியே புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.