ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார் தயா சந்தகிரி!

முன்னாள் கடற்படை தளபதியும், பாதுகாப்பு படைகளின் தலைவருமான தயா சந்தகிரி, ஐக்கிய மக்கள் சக்தியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி தலைவரான சஜித் பிரேமதாசவை சந்தித்து, அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டார்.

கட்சியில் இணைந்த உடன் தயா சந்தகிரிக்கு, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கடல் மற்றும் கடற்படைக் கொள்கைகளுக்கான ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கடந்த 29ம் தேதி முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!