யாழுக்கு வடக்கே வலுவடைந்தது தாழமுக்கம்!

தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவாகியுள்ள தாழமுக்கம் வலுவடைந்துள்ளது.

வலுவடைந்த தாழமுக்கம் யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையாக 330 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் 12 மணித்தியாலங்களில், மேலும் வலுவடைந்து சூறாவளியாக மாற்றமடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இச் சூறாவளி இலங்கையின் வடக்கு கடற்கரையை அண்மித்ததாக
நகர்கிறது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றையதினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என  இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை இலங்கையின் வடக்கு, தென் மற்றும் வடமத்திய மாகாணங்கள் உட்பட நாட்டில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அத்துடன், மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
மீனவர்கள் உட்பட எவரும் மறுஅறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!