15வது மாடியிலிருந்து குழந்தைகளை வீசிக் கொன்ற ஜோடிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சீனாவில் 2 குழந்தைகளை 15வது மாடியில் இருந்து வீசி கொன்ற ஜோடிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சீனாவில் Zhang Bo – Ye Chengchen என்ற ஜோடிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தனது மனைவி சென் மெய்லினை 2020ஆம் ஆண்டில் விவாகரத்து செய்த Zhang Bo,  அதன் பின்னர் Ye Chengchen  என்ற பெண்ணுடன் நெருங்கி பழகினார்.

இவர்களின் உறவுக்கு Zhang Boயின் இரண்டு குழந்தைகளும் தடையாக இருப்பதாக Ye Chengchen கருதியுள்ளார்.

இதனால் குழந்தைகளை கொல்ல நினைத்து தனது துணையை வற்புறுத்தியுள்ளார். இதனையடுத்து அவர்கள் இருவரும் குழந்தைகளை 15வது மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளனர்.

இதில் இரு குழந்தைகளும் துடிதுடித்து இறந்துள்ளன. இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பில் கைது செய்யப்பட்ட Zhang Bo, Ye Chengchen  ஜோடிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அதன்படி, இரண்டு ஆண்டுகள் கழித்து இருவருக்கும், ஊசி வழியே மருந்து உட்செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!