பஞ்சு மிட்டாய்க்கு தமிழ்நாட்டில் தடை!

தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் Rhodaminbe-B எனப்படும் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் -2006 பிரிவு 3(1) (ZX) பிரிவு 3 (1 ) (zz)(iii) (v) (viii) & (xi) மற்றும் 26(1) (2) (ixii) & (v)– ன் படி தரம் குறைவான மற்றும் பாதுகாப்பற்ற உணவு என உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 ன்படி Rhodamine-B எனப்படும் செயற்கை நிறமூட்டியை கொண்டு உணவுப் பொருட்களை தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் -2006 ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், இது குறித்து ஆய்வு செய்து உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006ன்படி கடுமையான நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அவர்களால் அனைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

பஞ்சுமிட்டாயில் ‘ரோடமைன் பி’ என்ற புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் பொருள் கலக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பலவேறு பகுதிகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பஞ்சுமிட்டாய் குறித்து ஆய்வு செய்தனர்.

அதில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், புதுச்சேரியில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டி தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!