மொட்டு கட்சிக்குள் வெளிப்படும் முரண்பட்ட கருத்துக்கள்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கிடையில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் மாற்று கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்கள் தொடர்பில் குறித்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், இதனை நிராகரித்த மகிந்த ராஜபக்ச, மே தின நிகழ்வுகள் குறித்து பேசப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கு விடுமுறைக்காக சென்றிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் கடந்த 5 ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு சென்றார்.

இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்கள் தொடர்பில், அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கட்சியின் உறுப்பினர்களுடன் அவர் தொடர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறார்.

இந்நிலையில், மொட்டு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இதன் போது, தேர்தல்கள் தொடர்பில் பேசப்பட்டதாக கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ரணில் விக்ரமசிங்கவும் தற்போது இணைந்து செயல்படுவதாகவும் இந்த நிலையில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பான கேள்வியெழுப்ப தேவையில்லை எனவும், கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு விரைவில் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!