சென்னை பள்ளிக்கரணையில் இளைஞர் ஒருவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்ததால் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பள்ளிக்கரணைப் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஷர்மி என்ற வேற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு திருமணம் செய்துள்ளனர். ஆனால் இதற்கு இருவரின் குடும்பத்தினரும் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரவீன் மது அருந்திவிட்டு வந்தபோது, அவரை ஷர்மியின் சகோதரர் தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் வழிமறித்துள்ளனர்.
அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அவர்கள் பிரவீனை கத்தியால் கொடூரமாக வெட்டியுள்ளனர்.
இதில் பிரவீன் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். உடேன தினேஷ் தனது நண்பர்களுடன் தப்பியுள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரவீன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், தப்பியோடிய தினேஷ் உட்பட 4 பேரையும் கொலை, sc/st வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.