மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சாவகச்சேரி வைத்தியசாலை!

சாவகச்சேரி வைத்தியசாலை நிர்வாகம் தொடர்பில் வைத்தியர் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியிருந்தன. இந்த நிலையில், நேற்றையதினம் (18) சாவகச்சேரி நிர்வாகம் தொடர்பில் முகநூலில் மற்றுமொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பதிவுடன் சம்பந்தப்பட்ட நபரின் தந்தை பாம்பு கடிக்கு ஆளான நிலையில் இரவு 12.40 மணியளவில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டதாகவும் ஆனால் வைத்தியசாலையில் யாரும் கடமையில் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், புதிதாக அமைக்கப்பட்ட ஓபிடிக்கு (OPT) அவரது தந்தை கொண்டு செல்லப்பட்டு பார்த்த போதும் அங்கும் யாரும் இருக்கவில்லை என்றும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் அறையிலும் யாரும் இருக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர் குறித்த நபரின் தந்தை யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு கமராக்களை அவதானிக்குமாறு இந்த பதிவில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பதிவினை தொடர்ந்து, சாவகச்சேரி வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக பொதுமக்கள் தமது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!