யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் படகில் அலங்கரிக்கப்பட்ட இரதம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
இந்த ரதம் நேற்றைய தினமே கரையொதுங்கியுள்ளது.
இது வெளிநாட்டில் சமய சம்பிரதாய நிகழ்வுகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைப்படும் இரதம் என அறியப்படுகிறது.
இருப்பினும் இது எவ்வாறு வந்தது, இது உண்மையிலேயே என்ன விடயத்திற்காக பயன்படுத்தப்பட்டது என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.