சுதந்திர கட்சிக்கு எதிராக செயல்படும் சந்திரிகா!

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சுதந்திர கட்சிக்கு எதிராக சதி செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுதந்திரக் கட்சியை அரசுடன் இணையச் செய்யும் நோக்கில் தாம் தலைமைப் பதவியில் நீடிப்பதனை தடுக்க நீதிமன்றின் உதவி நாடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த சதி திட்டத்தின் பின்னணியில் சந்திரிக்கா பண்டாரநாயக்க செயற்பட்டு வருவதாக மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மீண்டும் மனுத் தாக்கல் செய்து உண்மை நிலைமையை நீதிமன்றில் எடுத்துரைக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!