விஜய் கட்சி மீது பாய்ந்தது வழக்கு!

அரசியல் கட்சி ஆரம்பித்த நடிகர் விஜய் கட்சி மீது முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘தமிழக வெற்றிக் கழகம்‘ தனது கட்சியின் பெயரை கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் அறிவித்தார். இதையடுத்து அந்த கட்சி தொடர்பான நிர்வாகிகளுடன் அவ்வப்போது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனை கூட்டங்கள் விஜய் வீடியோ கால் மூலம் பேசுவார். மேலும், கட்சியின் கொடிகள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஏற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில், உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டை பகுதியில் புத்தமங்கலம், நெடுமானூர் மட்டிகை ஊர்களில் விஜய் கட்சியின் கொடி மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் ஏற்றபட்டது.

விஜய் கட்சியின் கொடி என்பதால், அந்த ஊர்களில் திருவிழா போல் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதற்கு காவல்துறையிடம் உரிய அனுமதி பெறவில்லை என்று கட்சியின் கொடி அகற்றப்பட்டது. மேலும், அனுமதியின்றி கட்சிக் கொடி ஏற்றியதாக தமிழக வெற்றிக் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!