இறந்தவர்கள் கனவில் வரலாமா? வந்தால் என்ன நடக்கும்?

நம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, ஒரு சில கனவுகள் வரும். மனிதர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நினைவுகளே, கனவுகளாக வெளிப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும் ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதில் குறிப்பாக பலருக்கும் இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்? இதனால் ஏதேனும் பிரச்சனைகள் வருமா என்பதை இங்கு பார்ப்போம்.

பொதுவாக இறந்தவர்கள் கனவில் வந்தால், நல்ல செய்தி வரும். நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள் என்று பொருள்.

அதே சமயம், இறந்தவர்கள் நம்மை ஆசீர்வதிப்பதுபோல் கனவு கண்டால் எல்லா விதமான நன்மைகள் ஏற்படும்.

இறந்தவர்கல் அழுவதுபோல் கனவு கண்டால் நல்லது கிடையாது. இதனால், உடனடியாக ஏதேனும் கோயிலுக்கு சென்று வருவது நல்லது. அதேபோல் இறந்தவர்கள் பேசுவதுபோல் கனவு கண்டால் பெயரும், புகழும் கிடைக்கும்.

இறந்தவர்கள் உங்கள் வீட்டில் தூங்குவதுபோல் கனவு வந்தால், பெரிய கண்டத்தில் இருந்து தப்பிக்க போகிறீர்கள். அவர்கள் உங்களுடன் சாப்பிடுவது போன்று கனவு வந்தால் இக்கட்டான நிலையில் உங்களுக்கு உதவ சிலர் வருவர் என்று அர்த்தம்.

Related posts

ரணில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியாது!

திருக்கேதீஸ்வர ஆலய மகோற்சவப் பெருவிழா ஆரம்பம்!

யாழில் முருக பக்தர்களின் பாதயாத்திரை ஆரம்பம்!