தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! பெற்றோர் பதற்றம்

சென்னையில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா நகர் மற்றும் ஜெ.ஜெ.நகரில் உள்ள பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார்.

இதனால், காவலர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த், “வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். பெற்றோர்கள் பதற்றம் அடைய வேண்டாம்.

பள்ளி வளாகங்களுக்குள் சந்தேகப்படும்படியான பொருட்கள் ஏதும் இல்லை. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!