தமிழ்நாட்டில் சற்றுமுன் திமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் சென்னை வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்தவர் ஆராமுதன். இவர் சென்னை அடுத்துள்ள வண்டலூரில் காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென்று மர்ம நபர்கள் சிலர் அவர் கார் கண்ணாடி மீது நாட்டு வெடிகுண்டுகளை தூக்கி வீசியுள்ளனர்.
இதனால், காரைவிட்டு வெளியில் ஓடிய அவரை அந்த கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால், படுகாயம் அடைந்த அவர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், வண்டலூர் சாலை மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. அப்பகுதி முழுவதை பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அந்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.