விடுதியில் மீட்கப்பட்ட அமெரிக்க பிரஜையின் சடலம்.

களுத்துறையில் பிரபல விடுதி ஒன்றின் அறையிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

67 வயதுடைய அமெரிக்க பிரஜை ஒருவரின் சடலமே இன்று (09) களுத்துறை வடக்கு பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விடுதி நிர்வாகம் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, ஹோட்டலின் அறை எண் 324 இல் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் களுத்துறை குற்றத்தடுப்பு விசாரணை நிலைய அதிகாரிகளும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!