ஜோதிகா குறித்து பிரபலம் பகிர்ந்த பகீர் தகவல்!

நடிகை ஜோதிகா குறித்து பயில்வான் ரங்கநாதன் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா – ஜோதிகா இவர்கள் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர். சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் அவரது 42வது படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் மும்பையில் குடியேறியிருக்கிறார். இதனால் ஜோதிகாவுக்கு, மாமனார் மாமியாருடன் தகராறு. சூர்யாவுடன் விவாகரத்து என்றெல்லாம் செய்திகள் பரவியது. ஆனால் அதெல்லாம் வதந்தி என தெரியவந்தது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், “ஜோதிகா போதையில் ஏதும் உளறினாரா என்று தெரியவில்லை. படத்தின் ப்ரோமோஷனுக்கு மும்பையிலிருந்து சென்னை வந்த அவர் பேட்டியும் கொடுத்துவிட்டு மீண்டும் மும்பைக்கே சென்றுவிட்டார்.

ஜோதிகாவுக்கு சென்னை என்றால் வேப்பங்காய் என்று முன்பே நான் சொன்னேன். இப்போதும் சென்னை வந்த அவர் தனது மாமனார், மாமியாரை பார்க்கவில்லை. அவர்களது முகத்தில்கூட முழிக்கக்கூடாது என்றுதான் மும்பைக்கே சென்றுவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

தாய்லாந்தில் நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமார் திருமணம்!

தனுஷ் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!

ஜெயம் ரவி -ஆர்த்தி டைவர்ஸ் உண்மையாம்! பிரபலம் கொடுத்த ஷாக்!