பண்டஸ்லிகா தொடரில் பாயர்ன் முனிச் அபார வெற்றி

ஜேர்மனின் பாயர்ன் முனிச் அணி பண்டஸ்லிகா தொடரில் ஆக்ஸ்பர்க் அணியை 2-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

பாயர்ன் முனிச் (Bayern Munich) மற்றும் ஆக்ஸ்பர்க் (Augsburg) அணிகள் மோதிய கால்பந்து போட்டி WWK Arena மைதானத்தில் நடந்தது.

பாயர்ன் அணி வீரர் Aleksandar Pavlovic ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தார்.

அவர் கார்னர் கிக்கில் இருந்து வந்த பந்தை தடுத்து, எதிரணியின் அரணை தகர்த்து வலைக்குள் தள்ளினார்.

இதனைத் தொடர்ந்து 45+5வது  நிமிடத்தில் அல்போன்சோ டேவிஸ் அபாரமாக கோல் அடிக்க, பாயர்ன் அணி 2-0 என முன்னிலை வகித்தது.

 

ஒருவழியாக ஆக்ஸ்பர்க் அணிக்கு முதல் கோல் 52வது நிமிடத்தில் கிடைத்தது. அந்த அணியின் Ermedin Demirovic இந்த கோலை அடித்தார்.

ஆட்டத்தின் 58வது நிமிடத்தில் பாயர்னின் நட்சத்திர வீரர் ஹரி கேன் அசால்டாக கோல் அடிக்க, போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

வெற்றிக்காக கடுமையாக போராடிய ஆக்ஸ்பர்க் அணி 90+4வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க (Ermedin Demirovicயின் இரண்டாவது கோல்), பாயர்ன் முனிச் 3-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!