கொழும்பில் பாண் தூள் மற்றும் பழைய அரிசிகளை அரைத்து பெறும் தூளை மிளகாய்த் தூளுடன் கலந்து விற்பனை செய்யும் மோசடி கும்பல் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – புறக்கோட்டை பகுதிகளில் உள்ள கடைகளில் இந்த மிளகாய் தூள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் சேவை அதிகார சபைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் கொழும்பு, கொஸ்கஸ் சந்தி பகுதியில் உள்ள ஒரு இடத்தில் இந்த மோசடி கும்பல் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக புறக்கோட்டையில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் இருந்து அகற்றப்பட்ட பாண் தூள்கள் மற்றும் பழைய அரிசி பயன்படுத்தப்பட்டுள்ளது.
புறக்கோட்டையில் உள்ள கடைகளுக்கு மிளகாய் பொடி கலந்து விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.