மக்களே அவதானம் ! இலங்கையில் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கையில் பல மாவட்டங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கொழும்பு, யாழ்ப்பாணம், குருநாகல், வவுனியா, காலி, புத்தளம் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமாக காணப்படுகின்றது.

காலநிலைக்கு ஏற்ப இந்த தன்மை அவ்வப்போது மாறலாம் எனவும் இன்று (17) வளி மாசு நிலைமை ஓரளவுக்கு குறையலாம் என நம்புவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் எல்லை தாண்டிய காற்று மாசுபாட்டால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா அல்லது பிற ஆசிய நாடுகளில் இருந்து வரும் காற்று ஓட்டத்துடன் காற்றின் தரம் மிகவும் சாதகமற்றதாக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!