பெற்றோர்களே அவதானம்!

இலங்கையில் குழந்தைகளிடையே தொழுநோய் பரவி வரும் நிலையில் அவற்றை தடுக்க குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களில் உள்ள பெரியவர்களை பரிசோதனை செய்ய வேண்டும் என தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குழந்தைகளிடையே தொழு நோயை இல்லாதொழிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் சராசரியாக 1,500 முதல் 2,000 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், இவர்களில் 10% பேர் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொழுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டறிவதன் மூலம் மட்டுமே தொழுநோயை ஒழிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளுக்கு மற்றொரு குழந்தையால் தொழுநோய் தொற்றாது எனவும், குழந்தைகளுக்கு ஏற்படும் தொழுநோயில் 90% பெரியவர்களால் தொற்றுவதாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடம் இலங்கையில் 1,550 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 173 பேர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்திலிருந்து அதிகளவான தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 315 ஆகும்.

மேலும், கம்பஹா மாவட்டத்தில் 168 தொழுநோயாளிகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 151 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 116 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!