பச்சை நிற ஜெர்சி அறிமுக விழாவில் விராட் மேக்ஸ்வெல் செய்த காரியம்!

10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடர் நாளை தொடங்க உள்ளது. இதில் ஆர்சிபி- சிஎஸ்கே அணிகள் மோதுகிறது.

இதற்காக இரு அணிகள் வீரர்களும் சென்னையில் பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை வந்த ஆர்சிபி, தங்களது புதிய பச்சை நிற ஜெர்சியை அறிமுகப்படுத்தியது.

இந்த நிகழ்ச்சியில் மேக்ஸ்வெல் மற்றும் விராட் கோலி நகைச்சுவையான சில விஷயங்களை அரங்கேற்றி உள்ளனர். அந்த வகையில் புதிய ஜெர்சி அறிமுகப்படுத்த 6 ஆர்சிபி வீரர்கள் இடம் பெற்றனர்.

அதில் டுபிளிசிஸ், விராட், மேக்ஸ்வெல், சிராஜ், பட்டித்தார், மணிபால் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

அப்போது முன்பக்க ஜெர்சியை புகைப்படம் எடுக்கப்பட்டது. அதேபோல பின்பக்க ஜெர்சியை படம் எடுக்க திரும்புமாறு செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

திரும்பிய வீரர்களில் மேக்ஸ்வெல் மட்டும் இடுப்பை ஆட்டி நடனம் ஆடினார். இதனை பார்த்த டுபிளிசிஸ், விராட், சிராஜ் ஆகியோர் சிரித்தனர்.

இது மட்டுமல்லாம் ஸ்பான்சர் (KEI) நிறுவனத்தின் பெயரை கேப்டன் டுபிளிசிஸ் திறந்து வைத்தார். அப்போது வெடி சத்தத்துடன் வண்ண காகிதங்கள் பூக்களை போன்று சிதறியது.

இதை எதிர்பாராத டுபிளிசிஸ் காதை மூடிக்கொண்டு ஓடினார். இதனை பார்த்த விராட் மற்றும் மேக்ஸ்வேல் வாய்விட்டு சிரித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!