சடலமாக மீட்கப்பட்ட இராணுவ சிப்பாய் : தீவிர விசாரணையில் பொலிஸார்

ஹொரணை – தொம்பகொட இராணுவ முகாமில் உள்ள குளத்தில் இருந்து இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.

அந்த முகாமில் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய எதிலிவெவ, தெலுல்ல கொலனியை சேர்ந்த 23 வயதுடைய தரிந்து லக்ஷான் என்ற இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகளை ஹொரணை நீதவான் நேற்று (29) மேற்கொண்டார்.

எனினும், உயிரிழந்த இராணுவ வீரரின் உறவினர்கள் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!