நாட்டின் நெருக்கடிக்கு நாம் காரணமா? – மறுக்கும் மஹிந்த

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு தானும் அரசாங்கத்தில் உள்ள பலருமே பொறுப்பு என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு கண்டிக்கு சென்ற அவரிடம் நிதி முறைகேடுகள் மற்றும் பொருளாதாரத்தின் முறைகேடுகளுக்கு காரணமானவர்களுக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்களில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறீர்களா என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதோ மேற்படி தெரிவித்தார்.
மேலும், குறித்த தீர்ப்பை ஏற்கப் போவதில்லை என்றும், அதற்கான காரணங்களை தாம் அடுத்த கட்சி மாநாட்டில் தெரிவிப்பதுடன் இதனை அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்  தெரிவித்தார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!