அஸ்வெசும விண்ணப்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் சுற்றுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இணையவழி முறைமையின் ஊடாக இதுவரை சுமார் 250,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜெயந்த விஜேரத்ன தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக மற்றுமொரு குழுவினர் தமது விண்ணப்பங்களை பிரதேச செயலகங்களில் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மேலும் தற்போது 16 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுகின்றனர் எனவும், அடையாள அட்டை இல்லாமை உள்ளிட்ட ஆவணங்களில் உள்ள பிரச்சினைகளால் இதுவரை 300,000 பேருக்கு மேல் நிவாரணம் வழங்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!