அனந்த் அம்பானியின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரல்!

அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகியுள்ளது.

சமீபத்தில் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சென்ட் என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமானது.

ஆனால் இவர்களது திருமண திகதி குறித்து வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், குஜராத்தின் ஜாம்நகரில் மார்ச் 1 முதல் 3ஆம் திகதி வரை அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட்டின் Pre Wedding  நிகழ்ச்சிகள் நடக்கும் என அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் வெளியாகியுள்ளது.

ஆனால் திருமண திகதி குறிப்பிடப்படவில்லை.

இந்த அழைப்பிதழில் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி கையால் எழுதப்பட்ட குறிப்பு இடம்பெற்றுள்ளது.

அந்த குறிப்பில், ” அனந்த் அம்பானியின் புதிய அத்தியாயத்தின் தொடக்கம் தங்கள் குடும்பத்தின் ஆரம்ப வாழ்க்கையை இணைகிறது.

ஜாம்நகரில் ஆசியாவின் பாரிய மாம்பழ தோட்டம் அமைந்துள்ளது. அப்பகுதியில் அனந்த் பல விலங்குகளை காப்பாற்றி வளர்த்து வருகிறார்.

இயற்கை சூழ நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.

இந்த திருமண அழைப்பிதழ் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரான முகேஷ் அம்பானி, நூறு பில்லியன் டொலர் பணக்கார கிளப்பில் இருக்கும் ஒரே இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!