இந்திய கிரிக்கெட் வீரர் திடீர் சுகயீனம்

இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வாலுக்கு புதுடெல்லி செல்லும் விமானத்தில் வைத்து உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்யும் போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக இந்திய ஊடகத் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலை தகவல்களுக்கு அமைய, அவரது தொண்டை பகுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர், விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அவருக்கு பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!