நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தில் உள்ள 2வது ஜெனரேட்டர் யூனிட் அதன் உயர் அழுத்த Heater அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தற்போது நீர் மின்சாரம் அதிக உற்பத்தி செய்யப்படுவதால், குறித்த ஜெனரேட்டர் யூனிட் பழுதுபார்க்கும் காலப்பகுதியில் மின்சார விநியோகம் பாதிக்கப்படாது எனவும், 3 வது ஜெனரேட்டர் அலகு செயல்பாட்டில் உள்ளது எனவும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.