11 மாத குழந்தையின் உயிரை பறித்த நுளம்பு..

யாழ்.தாவடியை பகுதியைச் சேர்ந்த 11 மாத குழந்தையொன்று டெங்கு நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 11 மாத குழந்தையே நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய்த் தொற்று தற்போது தீவிரமாக பரவி வரும் நிலையில், டெங்கு நோய் தொடர்பில், பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த குழந்தையின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவும் நிலையில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் த.சத்தியமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!