தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனைத்து வீரர்களும் தமிழக வீரர்களாக இருப்பார்கள் என சீமான் தெரிவித்துள்ளார்.
நேற்று இந்தியாவின் தூத்துக்குடி மாவட்டத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தின் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒருவர் கூட தமிழர் இல்லை எனவும், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் களத்தில் இறங்கும் 11 வீரர்களும் தமிழக வீரர்களாக இருப்பார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.