உலகக்கோப்பையில் முதல் சதம் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்

ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்காக முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார் இப்ராஹிம் ஸத்ரன்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கனிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இப்ராஹிம் ஸத்ரன் ஆட்டமிழக்காமல் 143 பந்துகளில் 129  ரன் கள் எடுத்தார்.
அவரது ஸ்கோரில் 8 பவுண்டரிகளும் 3 சிக்சர்களும் அடங்கும். ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் குவித்துள்ளது.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!