இலக்கை அடையப்போகும் ஆதித்யா எல்1′

ஆதித்யா எல்1′ விண்கலம், பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில் உள்ள எல்.1 என்ற லாக்ராஞ்சியன் புள்ளியை ஜனவரி 6-ஆம் திகதி அடையும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய முதல் விண்கலம் ஆதித்யா எல்-1 என்பதால் அது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருக்கின்றது.

இந்நிலையில் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கமளித்துள்ளார்.

இந்த விண்கலம் செப்டம்பர் 2 ஆம் திகதியன்று ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இஸ்ரோவால் ஏவப்பட்டது.

மேலும் ஆதித்யா எல்1 ஜனவரி 6 ஆம் திகதியன்று எல்1 புள்ளியில் நுழையும் என்று சோமநாத் தெரிவித்துள்ளார்.

ஆதித்யா எல்1 அதன் இலக்கை அடைந்தவுடன், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சூரியனில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை அளவிட உதவும் என்று சோம்நாத் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!