நடிகை சுஹானியின் இறப்புக்கு தந்தை கூறிய காரணம்

இந்தி நடிகை சுஹானி பட்னாகர் உயிரிழந்ததற்கு காரணம் அரிய வகை நோய் தான் என அவரது தந்தை கூறியுள்ளார்.

சமீபத்தில் தங்கல் பட நடிகை சுஹானி பட்னாகர், தனது 19வது வயதில் மருத்துமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது இந்த மரணம் திரையிலகினர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனால், சுஹானியின் மரணத்திற்கான காரணம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் சுஹானிக்கு Dermatomyositis எனும் அரிய நோய் பாதிப்பு ஏற்பட்டதாலேயே அவர் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து சுஹானியின் தந்தை கூறுகையில், ‘இரண்டு மாதங்களுக்கு முன்பு சுஹானி கைகளில் சிவப்பு புள்ளி ஏற்பட்டது. இதனை அலர்ஜி என நினைத்து வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றோம்.

ஆனால் என்ன நோய் என்று கண்டறிய முடியவில்லை. இதனையடுத்து சுஹானியின் உடல்நிலை மோசமடைய தொடங்கியது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு அவள் கைகளில் வீக்கம் ஏற்பட்டு, அது அதிகரிக்க தொடங்கியது. மேலும், இந்த வீக்கம் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவ தொடங்கியது.

இந்நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தோம். ஆனால் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு நுரையீரலில் திரவம் தேங்க ஆரம்பித்துவிட்டது என்று மருத்துவர்கள் கூறினர்.

 

மேலும் ஆக்சிஜன் அளவும் குறைய தொடங்கியது. இந்தநிலையில் அவளுக்கு கொடுக்கப்பட்ட ஸ்டெராய்டுகளால் அவளது நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட்டது.

வெண்டிலேட்டரில் வைத்தபோதும் ஆக்சிஜனின் அளவு குறைந்துதான் காணப்பட்டது. பின்னர் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்’ என தெரிவித்துள்ளார்.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!