Aerobridge-யில் அடைப்பட்டதால் கோபமாக வீடியோ வெளியிட்ட நடிகை ராதிகா ஆப்தே

பிரபல இந்தி நடிகை ராதிகா ஆப்தே விமான நிலையம் ஒன்றில், ஒரு மணிநேரத்திற்கு மேலாக Aero bridge-யில் அடைத்து வைக்கப்பட்டதால் வெளியிட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

இந்தியில் பிரபலமான நடிகையான ராதிகா ஆப்தே , தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், ராதிகா ஆப்தே விமான நிலையம் ஒன்றின் Aerobridge-யில்இ ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அடைக்கப்பட்டது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், ‘இன்று காலை 8.30 மணிக்கு விமானத்தில் செல்ல இருந்தேன். 10.15 மணியைக் கடந்தும் விமானம் புறப்படவில்லை.

ஆனால், விமானம் புறப்பட்டுவிடும் எனக் கூறி பயணிகள் அனைவரையும் Aerobridge-யில் அடைத்து வைத்தனர்.

பயணிகளில் பலர் குழந்தைகளை வைத்துள்ளனர்; வயதானவர்களும் உள்ளனர். எல்லோரையும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக Aerobridge-யில் அடைத்து வைத்தனர்.

பாதுகாவலர்கள் கதவை திறக்கவில்லை. ஊழியர்களுக்கும் என்ன நடக்கின்றது என தெரியவில்லை.

நானும் உள்ளே பூட்டப்பட்டுள்ளேன். 12 மணிவரை உள்ளேயே இருக்க வேண்டியிருக்கும் என ஊழியர்கள் தெரிவித்தனர். குடிக்க தண்ணீர் கூட இல்லை. வேடிக்கையான இந்தப் பயணத்திற்கு நன்றி’ என கூறியுள்ளார்.

ராதிகா எந்த விமான நிலையத்தில் இது நடந்தது என குறிப்பிடாத நிலையில், அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

 

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

மில்ரன் கீன்ஸ் தமிழ் கல்விக்கழக இல்ல மெய் வல்லுநர் போட்டி- 2024