வைரலாகும் அமலாபால் வளைகாப்பு புகைப்படங்கள்!

அமலா பால் அறிமுகமான சிந்து சமவெளி படத்தில் தொடங்கி ஆடை படம் வரை சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத நடிகையாக இருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக சினிமா பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்த இவர், தனது நீண்ட நாள் நண்பன் ஜெகத் தேசாயை திருமணம் செய்து கொண்ட நிலையில், நேற்று அமலா பாலுக்கு பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடந்துள்ளது.

சர்ச்சைக்கு பஞ்சமே இல்லாத நடிகையான அமலா பால் சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே விஜய், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

பிரபல இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், திருமணமான சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அமலா பால் தற்போது தனுஷ் இயக்கும் D50 படத்திற்கு ராயன் என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருப்பதாகவும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிக்கின்றனர்.அப்படத்தில் அமலா பால் கமிட்டாகி உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

நடிகை அமலாபால், தன்னுடைய பிறந்த நாளன்று ஜெகத் தேசாய் என்பவரை காதலிப்பதாக புகைப்படத்துடன் அறிவித்தார். இதையடுத்து, ஒரே வாரத்தில் அவரை திருமணமும் செய்துகொண்டார்.

அமலா பால், ஜெகத் தேசாய் ஜோடியின் திருமணம் கடந்தாண்டு நவம்பர் மாதம் கொச்சியில் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணமான இரண்டே மாதத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் அமலா பால்.

இந்நிலையில், அமலா பாலுக்கு கேரளாவில் பாரம்பரிய முறைப்படி குடும்பத்தினரின் முன்னிலையில் வளைகாப்பு விழா நடைபெற்றது. அதில், அமலா பால் தன்னுடைய கணவர் ஜெகத் தேசாய் உடன் மகிழ்ச்சி பொங்க எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருவதோடு, அவருக்கு வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

தாய்லாந்தில் நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமார் திருமணம்!

தனுஷ் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!

ஜெயம் ரவி -ஆர்த்தி டைவர்ஸ் உண்மையாம்! பிரபலம் கொடுத்த ஷாக்!