ரோப் கேமரா அறுந்து நடிகர் சூர்யா காயம்! படப்பிடிப்பில் விபத்து
சென்னையில் நடைபெற்று வந்த கங்குவா படப்பிடிப்பில் ரோப் கேமரா அறுந்து விழுந்ததில் நடிகர் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
ஸ்டுடியோ க்ரீன் மற்றும் யு வி க்ரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் திஷா படானி ஆகியோர் நடித்து வரும் படம் கங்குவா.
இப்படம் சரித்திரகால படமாக உருவாகி வருகிறது.
இதில் நடிகர் சூர்யா பழங்குடி போர் வீரனாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஈவிபி பிலிம் சிட்டியில் நடைப்பெற்று வந்துள்ளது.
நேற்று இரவு 1:30 மணியளவில் படப்பிடிப்பு நடக்கும் போது, சுமார் 10 அடி உயரத்தில் இருந்த ரோப் கேமரா அறுந்து விழுந்தது. இதில் சூர்யா லேசான காயத்துடன் தப்பித்தார்.
இருப்பினும் நடிகர் சூர்யா தோள்பட்டையில் சிறிய காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து தனது X தளத்தில் நடிகர் சூர்யா “நான் நலமுடன் திரும்பிவர என்னை விசாரித்த என் அன்பு நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் எனது அன்பான ரசிகர்களுக்கு நன்றி. தற்போது நலமுடன் இருக்கிறேன். உங்கள் அன்புக்கு நன்றி” என கூறியுள்ளார்.