சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன், வெற்றி துரைசாமி உயிரிழந்த நிலையில், அவரின் வீட்டிற்கு நடிகர் சூர்யா, சிவக்குமார் நேரில் சென்று அவரது புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, திரைப்பட ஷூட்டிங்கிற்காக லோகேசன் பார்க்க சைதை துரைசாமியின் மகன், வெற்றி துரைசாமி இமாச்சலப் பிரதேசம் சென்றிருந்தார்.
அப்போது கார் விபத்தில் சிக்கியதால், அங்கிருந்த ஆற்றில் வெற்றி துரைசாமி அடித்துச் செல்லப்பட்டார். இதையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டது. சென்னையில் கொண்டு வந்து அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அன்றைய தினம் நேரில் வரமுடியாத காரணத்தினால் நடிகர் சூர்யா, தந்தை சிவக்குமார் சைதை துரைசாமியின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளனர்.
அப்போது, அங்கிருந்த வெற்றி துரைசாமியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.