விஜயகாந்த் குறித்து நடிகர் ரஜினிகாந்த் வேதனை..

எப்படியும் உடல்நலம் தேறி வந்துவிடுவார் என்று நினைத்தோம், விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் உடல் இன்று மாலை அவரது கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நடிகர்கள் பலரும், ரசிகர்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விஜயகாந்த்தின் மறைவு குறித்து நடிகர் ரஜினிகாந்த் ஊடகத்திடம் கூறும்போது,

அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களை இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. விஜயகாந்த் அவர்கள் அசாத்தியமான மன உறுதி உள்ள மனிதர்.

எப்படியும் அவர் உடல்நலம் தேறி வந்துவிடுவார் என்று நினைத்தோம். ஆனால் சமீபத்தில் நடந்த தேமுதிக பொதுக்குழுவில் அவரை பார்க்கும்போது எனக்கு கொஞ்சம் நம்பிக்கை கம்மி ஆகிடுச்சு.

அவர் மட்டும் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார். தமிழ் மக்களுக்கு நிறைய நல்லது செய்திருப்பார்.

அந்த பாக்கியத்தை தமிழ் மக்கள் இழந்திருக்கோம். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என வேதனை தெரிவித்தார்

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!