மன்னிப்பு கேட்டார் நடிகர் ஜெயம் ரவி!

பிரபல நடிகர் ஜெயம் ரவி ரசிகர் ஒருவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஜெயம் படம் மூலம் அறிமுகமான ரவி, அதன் பின் ஆ.குமரன், சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, தனி ஒருவன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது. இதனால், அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது ரசிகர்களை நேரில் சந்தித்து புகைப்படங்கள் எடுத்து வருவார்.

அந்த வகையில், சமீபத்தில் சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில், ரவியின் ரசிகர் ஒருவர், தனது X பக்கத்தில், “உங்களிடம் செல்ஃபி எடுக்க முயன்றேன். ஆனால், நீங்கள் ஒத்துழைக்கவில்லை” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இதைக் கண்ட ரவி உடனே அவருக்கு, “மன்னிக்கவும் சகோதரா! 300 பேருக்கும் மேல் செல்ஃபி எடுத்துக் கொண்டேன். உங்களை எப்படி தவறவிட்டேன் என தெரியவில்லை. சென்னை வந்து என்னை சந்தியுங்கள்” என்று குறிப்பிட்டார். உடனே அந்த ரசிகர் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை தன் ட்விட்டை நீக்கிவிட்டார்.

 

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!