கைவிடப்பட்டது டெலிகொம் பகிஷ்கரிப்பு ..

ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவன ஊழியர்களால் கடந்த 9 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

பணிப்பாளர் சபையுடன் கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில், பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது என இலங்கை அனைத்து தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜகத் குருசிங்க தெரிவித்துள்ளார்.

டெலிகொம் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை விற்பனை செய்ய ஏற்பாடுகள் இடம்பெறும் நிலையில், அதனை விற்பனை செய்ய வேண்டாம் என வலியுறுத்தியும் இப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

நாட்டின் பல பகுதிகளில், டெலிகொம் நிறுவனத்தை விற்பனை செய்ய வேண்டாம் – என வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!