இலங்கையை சேர்ந்த இளைஞன் பரிதாப பலி!

வெளிநாட்டில் இருந்து வந்த இளைஞன், வந்த சில மாதங்களிலேயே உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கம்பளை போவல, பலதொர பிரதேசத்தை சேர்ந்தவர் சமரநாயக்க (30). இவர் பல ஆண்டுகளாக கொரியாவில் வேலை செய்து வந்தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவர் திருமணத்திற்காக இலங்கை திரும்பியுள்ளார். திருமணமும் வெகு விமர்சியாக நடைபெற்றது.

இதையடுத்து, இலங்கையில் அவர் இயந்திரங்கள் மூலம் மரம் வெட்டும் தொழில் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அப்படி மரம் ஒன்றை வெட்டும்போதே, இயந்திரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இன்னும் சில நாட்களில் அவர் மீண்டும் தனது மனைவியுடன் கொரியா செல்ல திட்டமிருந்த நிலையில், அவரது மரணம் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

“மரம் வெட்டும் இயந்திரத்தில் வேலை செய்தபோது, மரம் எதிர்பாரதவிதமாக அவரது தலையில் விழுந்துள்ளது. இதில் ஏற்பட்ட பலத்த காயமே அவரது உயிரிழப்பு காரணம்” என பிரதே பரிசோதனை மேற்கொண்ட அதிகாரி அமிலதா தெரிவித்துள்ளார்

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!