குளிக்க சென்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு – மாத்தளன் கடலில் குளிக்க சென்ற இளம் குடும்பஸ்தரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

முல்லைத்தீவு மாத்தளன் பகுதி கடற்கரையில் நேற்றையதினம் மாலை குடும்பத்தினருடன் கடலில் குளித்துக்கொண்டிருந்த வேளை குறித்த குடும்பஸ்தர் அலையால் இழுத்து செல்லப்பட்டு மாயமாகியிருந்தார்.

குறித்த நபரை தேடுதல் நடாத்தியும் சடலம் கண்டுபிடிக்கமுடியாத நிலையில் இன்றையதினம் சடலம் சாலை கடற்கரைப்பகுதியில் கரையொதுங்கியுள்ளது.

10 ஆம் வட்டாரம் புதிய குடியிருப்பினை சேர்ந்த 33 அகவையுடைய இராசதுரை கஸ்தூரன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் பிரேத பரிசோதனையினை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்க உத்தரவிட்டார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!