மருந்து ஒவ்வாமையாலேயே பல்கலை மாணவி மரணம்!

நேற்றுமுன்தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார் எனும் செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் மாணவி உயிரிழப்புக்கான காரணம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெங்கு காய்ச்சலுக்கு செலுத்தப்பட்ட, மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே, குறித்த பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார் – என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் இறுதியாண்டு மாணவியான குணரத்தினம் சுபீனா என்ற 25 வயதான மாணவி நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.

காய்ச்சல் ஏற்பட்டு, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இம் மாணவி, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், குறித்த மாணவி யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.

மாணவியின், உயிரிழப்பு தொடர்பில் உடற்கூற்று பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவிக்கு, செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்த மாணவியின் உடற்கூறு பகுதி மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

பரிசோதனைக்கு பின்னர், உயிரிழந்த மாணவியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!