அம்பிடிய – பிடிகல பிரதேசத்தில் கிறிஸ்மஸ் தாத்தா வித்தியாசமான பரிசு பொருட்களை வழங்கியுள்ளார்.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறுவர்களுக்கு கிறிஸ்மஸ் தாத்தா பரிசு வழங்குவது வழமயானது. எனினும் இம்முறை நத்தார் பண்டிகையின் போது கிறிஸ்மஸ் தாத்தா போன்ற ஆடையணிந்த ஒருவர் வீடுகளுக்குச் சென்று வெங்காயம் மற்றும் முட்டை என்பனவற்றை பரிசாக வழங்கியுள்ளார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாறு முட்டை மற்றும் வெங்காயத்தை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.