மதுவை ஏற்றி சென்ற வர்த்தகர் கைது..

‘யுக்திய மெஹெயும’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவசர வீதித் தடுப்பில் மதுவை ஏற்றிச் சென்ற வர்த்தகர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேகத்திற்குரிய வர்த்தகர் பயணித்த சொகுசு ஜீப்பை தெல்கந்த விஜராம ஹைலெவல் வீதி பகுதியில் பொலிஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது அதில் மதுபானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலதிக விசாரணைகளின் போது 67 வயதான சந்தேக நபர் கொஹுவல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் என தெரியவந்துள்ளது.

மேலதிக சோதனையின் போது, குறித்த சொகுசு ஜீப்பில் இருந்து 72 வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் 168 பியர் கேன்கள் உட்பட பல்வேறு மதுபான போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் பொருட்களும் கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!