இந்திய மாநிலம் கேரளாவில் தனது 5 வயது மகனுடன் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தம்பதி மகேஷ் மற்றும் சரண்யா (25). இவர்களது 5 வயது மகன் மிதுன்.
மகேஷ் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் தம்பதிக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் சரண்யா மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
பின்னர் தனது மகன் மிதுனை அழைத்துக் கொண்டு அயந்தி ரயில்வே தண்டவாளத்திற்கு சரண்யா சென்றுள்ளார்.
அங்கு வந்த கொல்லம் – கன்னியாகுமரி ரயில் முன் அவர் தனது மகனுடன் பாய்ந்துள்ளார். இதில் தாய் மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சரண்யா, மிதுன் உடல்களைக் கைப்பற்றினர்.
இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக அவர்களின் உடல்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.