இரு மாணவர்களுடன் விடுதியில் தங்கிய ஆசிரியர் கைது..

அனுராதபுரம் – எப்பாவல நகரில் விடுதி ஒன்றில் இரண்டு பாடசாலை மாணவர்களுடன் தங்கியிருந்த ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

51 வயதான விளையாட்டு ஆசிரியரையே எப்பாவல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த ஆசிரியர் தனது பாடசாலையில் பயிலும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேருடன் விடுதியில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் அனுராதபுரம் பொது விளையாட்டு அரங்கில் 27 ஆம் திகதி நடைபெற்ற வொலிபோல் பயிற்சிக்காக இந்த மாணவர்களை அழைத்துச் செல்வதாக பெற்றோரிடம் கூறி, எப்பாவல நகருக்கு அழைத்து சென்றுள்ளார்.

அழைத்து வரப்பட்ட மாணவர்களை மீண்டும் வீடுகளுக்கு அனுப்பாது விடுதியில் தங்க வைத்திருப்பது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் இன்று தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!