சிறையில் சந்தேகநபர் உயிரிழப்பு..

மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த
சந்தேகநபர் ஒருவர் ஏனைய கைதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி
உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது
சுகவீனமடைந்த போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்
உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் நேற்று (30) நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில்
மொட்டையான ஆயுதங்களால் தாக்கப்பட்டமையால் மரணம் ஏற்பட்டுள்ளதாக
உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் கடந்த 27ஆம் திகதி மட்டக்களப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு,
பொலிஸ் அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அதே அறையில்
அடைக்கப்பட்டிருந்த ஏனைய கைதிகள் குழுவுடன் முரண்பட்டதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!